மாடு கட்டுவது தொடர்பாக மோதல்; 2 பேர் மீது வழக்கு

மாடு கட்டுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-10-19 00:00 IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வானத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 55), விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கொளஞ்சிநாதன் (52) என்பவருக்கும் இடையே மாடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்