நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு

நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 19:15 GMT

நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகநாதர் கோவில்

நாகையில் பிரசித்திப்பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனாகிய நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி அனுக்ஞை, மகா கணபதி யாகம், மகா லட்சுமி யாகம், நவக்கிரக யாகம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

7-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. 8-ந் தேதி காலை 2-ம் கால யாகசாைல பூஜை, மாலை 3-ம் கால யாகசாலை பூஜை, 9-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜை, 5-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

குடமுழுக்கு

நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதன் முடிவில் கோவில் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்