நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது.

Update: 2023-05-09 18:45 GMT

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 1-ந்தேதி 116.65 அடியாக இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. அதன்படி, நேற்று அணையின் நீர்மட்டம் 117.40 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 308 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 100 கன அடியாகவும் உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெரியாறு 4.6, தேக்கடி 9.8, கூடலூர் 6.8, சண்முகா நதி அணை 2.4, உத்தமபாளையம் 1.8, போடி 0.6, வைகை அணை 5.2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 5, பெரியகுளம் 21, வீரபாண்டி 8.2, அரண்மனைப்புதூர் 57.8, ஆண்டிப்பட்டி 5.8.

Tags:    

மேலும் செய்திகள்