சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.

Update: 2022-09-24 20:24 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 15 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், தலைவாசல், சங்ககிரி, வீரபாண்டி, காடையாம்பட்டியில் தலா ஒருவரும், திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்த 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்