400 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

400 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Update: 2022-09-10 17:56 GMT

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 36-வது சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 11,600 பேருக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்