அரூரில் 1,350 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

Update: 2023-07-04 19:30 GMT

அரூர்:

அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் 270-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,350 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இந்த வாரம் பி.சி. ரக பருத்தி குவிண்டால் ரூ.5,858 முதல் ரூ.6,500 வரையும், கொட்டு ரக பருத்தி ரூ.3,090 முதல் ரூ.3,590 வரையும் ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் மொத்தம் 1,350 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்திற்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்