நாட்டு நலப்பணி திட்ட முகாம்

பாளையங்கோட்டை அருகே பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-10-26 21:35 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து ஆயன்குளம் பள்ளியில் புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் நிர்மலா லூயிஸ், தலைமை ஆசிரியர் வசந்திமேரி ப்ரெண்டா, சித்த மருத்துவர் ராஜா, திட்ட அலுவலர் விர்ஜின் மார்சலின், உதவி திட்ட அலுவலர் சோனா, வார்டு உறுப்பினர் மரியதங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்