அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

Update: 2023-05-26 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 23). தொழிலாளி. இவர் வீட்டில் செல்போனை சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் போர்டில் ஒயரை இணைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அனுமன்தீர்த்தம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்