சேலம்
சேலம் அழகாபுரம் குட்டைமேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு ராகுல் என்ற 2 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சளி அதிகமாக இருந்ததால் நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் குழந்தையின் சாவில் மர்மம் நீடிப்பதாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிப்பு காரணமாக ஆண் குழந்தை இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.