பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு

Update: 2023-08-29 19:45 GMT

ஓசூர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது64). தொழிலாளி. இவர் பாகலூர் ஜி.மங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 26-ந் தேதி இவரது மனைவி பார்வதி (58) சொந்த ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. மேலும் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. மறுநாள் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்