சங்ககிரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-10-01 20:20 GMT

சங்ககிரி

சங்ககிரி-கொங்கணாபுரம் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையடுத்து சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அம்பியாஷேக் மகன் அமீர் ஷேக் (வயது20) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சங்ககிரி அருகே ராஜாமணி தோட்டம் அருகே அமீர்ஷேக் மின் கம்பத்தின் மீது ஏறி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அமீர் ஷேக் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்