வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-08-15 18:52 GMT

பரமக்குடி, 

பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் ராமச்சந்திரன் (வயது32). கூலி வேலை பார்த்து வந்தார். இவர் எமனேஸ்வரம் நாடார் தோப்புபகுதி வைகை ஆற்று தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்தது.

அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் எமனேஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் அங்கு சென்று இறந்த ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்