கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

பர்கூர் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.;

Update:2022-12-05 00:15 IST

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் சென்றாய நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மதுபோதையில் சீமனூர் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பர்கூர் ஜெகதேவி சாலையில் நடந்து சென்ற போது அவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்