மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

பாரூர் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-10 18:45 GMT

காவேரிப்பட்டணம்

பாரூர் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள சாமாண்டப்பட்டியை சேர்ந்தவர் தீர்க்கசுந்தரம் (வயது40). கட்டிட தொழிலாளி. இவர் சாமாண்டப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது கை மின்சார வயரில் மோதியது.

இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தீர்க்கசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தீர்க்கசுந்தரத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்