பாம்பு கடித்து பெண் சாவு

நல்லம்பள்ளி அருகே பாம்பு கடித்து பெண் இறந்தார்.

Update: 2023-03-06 18:45 GMT

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே கத்திரிக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பத்மாவதி (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த விறகை எடுத்துள்ளார். அப்போது விறகில் இருந்த பாம்பு பத்மாவதியை கடித்தது. இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மாவதி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்