மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கூரியர் நிறுவன ஊழியர் சாவு

அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கூரியர் நிறுவன ஊழியர் சாவு

Update: 2023-03-07 21:55 GMT

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தேவாங்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 40). இவர் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். தேவாங்கர் காலனி பகுதியில் பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், விரைந்து சென்று ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்