கிணற்றில் தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி சாவு

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி இறந்தார்.

Update: 2023-03-10 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள கனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ஆனந்தி (வயது 16). இவர் கனகமுட்லு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு மாணவி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் மாணவி தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்