சேலம் மாநகராட்சி 57-வது வார்டில் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாநகராட்சி 57-வது வார்டில் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை

Update: 2023-07-02 20:00 GMT

சேலம், 

சேலம் மாநகராட்சி 57-வது வார்டுக்கு உட்பட்டு புலிக்கார தெரு, ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் வீடுகளில் கட்டியிருந்த கருப்பு கொடிகளை அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்