திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.;
விழுப்புரம்:
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாணவர் அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணபாண்டியன் கண்டன உரையாற்றினார். இதில் திராவிடர் கழக இளைஞரணியினர், மாணவர் அணியினர் பலர் கலந்துகொண்டனர்.