ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

Update: 2022-08-03 16:39 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட தளி அருகே கும்மளாபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்பெட்டப்பா (வயது 70). பூ வியாபாரம் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று கும்மளாபுரம் மடம் ஏரியில் தாமரை பூக்களை பறிக்க சென்றபோது ஏரி நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்