பரமத்திவேலூர் அருகே வெல்ல ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

பரமத்திவேலூர் அருகே வெல்ல ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு;

Update:2022-11-12 00:01 IST

பரமத்திவேலூர்:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சித்தையன் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் வேட்டுவங்காடு பகுதியில் உள்ள ஒரு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது சித்தையன் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்து திடுக்கிட்ட சக தொழிலாளர்கள் சித்தையனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்