பள்ளிபாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-12-15 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருேக உள்ள தாஜ்நகர் பஸ் நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்றவர்கள் உடனடியாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்