விபத்தில் விவசாயி பலி

Update: 2023-01-19 18:45 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் மணப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு மொபட் மீது சேகர் ஓட்டிச்சென்ற மொபட் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி சரஸ்வதி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்