திருமணம் ஆகாத விரக்தியில் டிரைவர் தற்கொலை

விருத்தாசலத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-31 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). டிரைவர். இவருக்கு தாய், தந்தை இல்லை. இந்நிலையில், திருமணத்துக்காக வரன் தேடி வந்த நிலையில், இது வரைக்கும் திருமணம் கை கூடவில்லை. இதனால் அவர் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சுதாகர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அந்த கடிதத்தில் நான் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது எனவும், வீட்டில் உள்ள பொருட்களை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதியிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்