விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிாிழந்தாா்.

Update: 2023-01-31 18:45 GMT

விழுப்புரம் அருகே சென்னகுணத்தை சேர்ந்தவர் மயிலன் (வயது 50). இவர் சென்னை கோயம்பேடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார். மாம்பழப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்