கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து டிரைவர் சாவு

பேரூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-02-27 18:45 GMT

பேரூர்

கோவை அடுத்த வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42), டிரைவர். திருமணமான இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவியுடன் விவாகரத்து செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கனகராஜ் தீத்திபாளையம்-அய்யாசாமி மலைக்கோவில் செல்லும் சாலையில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார்.

அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, கனகராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்