சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் கோர்ட்டில் சரண்

மணலி புதுநகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் கோர்ட்டில் சரண்அடைந்தார்.

Update: 2023-06-01 10:10 GMT

மணலி புதுநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). லாரி டிரைவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இளம்பெண் வீட்டில் இல்லாத போது அவரது முதல் கணவருக்கு பிறந்த 14 வயது சிறுமிக்கு கண்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் 7 மாதமாக தலைமறைவாக இருந்த கண்ணன் சென்னை மகிளா கோர்ட்டில் சரண்அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்