வாகனம் மோதி டிரைவர் பலி

நாலாட்டின்புத்தூர் அருகே வாகனம் மோதி டிரைவர் இறந்தாா்.

Update: 2022-11-13 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ரோசாரியா பெனிட்டோ (வயது 38). டிரைவரான இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் நடந்த ஓட்டுநர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். நாலாட்டின்புத்தூர் அருகே மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த ரோசாரியா பெனிட்டோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரோசாரியா பெனிட்டோவிற்கு அந்தோணி கிளாரா என்ற மனைவியும், ஜோர்கன் என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்