மதுபோதையில் கார் ஓட்டியவர் கைது

திசையன்விளையில் மதுபோதையில் கார் ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-21 18:50 GMT

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நாடார் அச்சம்பாடு, மருதநாச்சிவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபோதையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டிச்சென்ற தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையை சேர்ந்த ஆர்தர் மகன் ஜெகன் (வயது 40) என்பவரை மடக்கிபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்