மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்பெரியகுளத்தில் நாளை நடக்கிறது

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

Update: 2023-09-03 18:45 GMT

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் சகாயராஜ் தலைமை தாங்குகிறார். இதில் பெரியகுளம் மின்கோட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்