சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-08-25 16:20 GMT

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இதேபோல், புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் கணேஷ் (வயது 26). எலக்ட்ரீசியன். இவர் அதே சிறுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18.5.2017 அன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த கணேஷ் அந்த சிறுமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது பற்றி வெளியில் சொன்னால், உன்னையும், உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

10 ஆண்டு சிறை

இருப்பினும் இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட கணேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அரசின் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்