தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்;

Update:2022-05-25 23:23 IST

 சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரித்தண்டலர் அமுதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இதில், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் சீருடைகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்