நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை..!

கலெக்டர் அலுவலகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-13 09:18 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் நெல்லையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் , நகரின் முக்கிய பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் இன்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்