சுரண்டை:
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சுரண்டையில் இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடந்தது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் புரை பரிசோதனை செய்தனர். முகாமில் பலர் கலந்து கொண்டனர்.