போலி டாக்டர் கைது

கூத்தாநல்லூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-07 18:45 GMT

கூத்தாநல்லூர்:

திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையம், நாலாநல்லூரைச் சேர்ந்தவர் சவுரிராஜ் (வயது 37).இவர் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி பகுதியில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். இவரது கிளினிக்கில் எம்.பி.பி.எஸ். என பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூர் மருத்துவ அதிகாரி பிருந்தா கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார், சவுரிராஜிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுரிராஜை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்