பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி - சிலிண்டர் டெலிவரி செய்த தொழிலாளி பலி...!

சிவகங்கையில் அதிக காற்று வீசியதில் சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றவர் மீது கண்ணாடி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-12-09 11:40 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று பிற்பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை வழக்கத்தைவிட அதிகமான காற்று வீசியுள்ளது. இந்த சமயத்தில் காரைக்குடிசை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அப்பகுதியின் பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரி செய்துள்ளார்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி பெயர்ந்து பழனியப்பன் கழுத்தில் விழுந்துள்து. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், இரத்த வெள்ளத்தில் பழனியப்பன் கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்த வந்த ஆம்புலன்சில் பழனியப்பனை சிகிச்சைக்காக பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் பழனியப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காற்று வீசியதில் சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றவர் மீது கண்ணாடி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்