கடன் சுமையால் விவசாயி தற்கொலை

கடன் சுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-06 19:05 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 36). விவசாயி. இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளும் உள்ளனர். விஸ்வநாதனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடன் சுமை இருந்து வந்தது. இதில் மனமுடைந்த விஸ்வநாதன் நேற்று முந்திரித்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் விஸ்வநாதனின் மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்