மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ேமாட்டார் சைக்கிள் ேமாதி விவசாயி இறந்தார்.

Update: 2022-08-10 19:40 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணச்சாமி (வயது 60). விவசாயி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் நடந்து சென்றார். எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மானகசேரியைச் சேர்ந்த சின்னத்தம்பி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்