விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

Update: 2023-10-25 18:45 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி(வயது 65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்்போது அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கதிர்வேல்(19) ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், கண்ணுச்சாமியின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கண்ணுச்சாமி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கதிர்வேல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்