குளிக்க சென்ற இடத்தில் கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

ஜோலார்பேட்டை அருகே குளிக்க சென்ற இடத்தில் கிணற்றில் மூழ்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-11 09:32 GMT

திருப்பத்தூர்:

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது40). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கலைவாணி கடந்த 2 வருடத்திற்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இவரது மகன் பிளஸ் டூ முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அன்பழகன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வராததால் அவரது தம்பி குளிக்கச்சென்ற அண்ணனை தேடியுள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும், ஜோலார்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் மூழ்கிய அன்பழகனை சுமார் அரை மணி நேரம் போராடி இறந்த நிலையில் மீட்டனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே தாய் இழந்த பிள்ளைகளுக்கு தற்போது தந்தையும் இறந்துள்ள சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்