சிவகங்கையில் 27-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கையில் 27-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.;
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை குறித்து தெரிவித்து நிவாரணம் பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.