பாகலூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்

பாகலூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-07 18:45 GMT

ஓசூர்

பெண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது நிலத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்தன. இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம், அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

கொலையா?

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அந்த இடத்தில் மது அருந்திய நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் பெண் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்