தமிழகத்தில் ஓராண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Update: 2023-12-16 01:48 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களை சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அடுத்த ஓராண்டிற்குள் இந்த திட்டம் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்