மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 34). மீனவரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.