பண்ருட்டி அருகே மரப்பலகையால் தாக்கப்பட்ட மீனவர் சாவு

பண்ருட்டி அருகே மரப்பலகையால் தாக்கப்பட்ட மீனவர் உயிரிழந்தார்.

Update: 2022-06-30 16:31 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த கந்தன் பாளையத்தில் வசித்து வந்தவர் பன்னீர்(வயது 50). மீனவர். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குமார்(56). கடந்த 12-ந்தேதி இரவு, தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டிக்கொண்டிருந்தார். அப்போது குமார் தன்னை திட்டுவதாக நினைத்து என்னை ஏன் திட்டுகிறாய் என கூறி கொலை மிரட்டல் விடுத்தால் மேலும் தான் கையில் வைத்திருந்த மரப்பலகையால், பன்னீரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை பன்னீர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்