மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-09-17 19:15 GMT


சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் ராம லெட்சுமி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் சரவணன் வரவேற்று பேசினார். விழாவில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் அ.தி.மு.க. நகர் செயலர் ராஜா, ஒன்றியச் செயலர் கருணாகரன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் கோட்டையன், நகர் துணைச் செயலர் மோகன், கல்லல் ஒன்றிய செயலர் தசரதன், சத்தியமூர்த்தி, சரவணன், முருகன், சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்