குறைகேட்பு கூட்டத்தில் 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-09-26 16:09 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியார் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, பட்டா மாறுதல், ஏரி, குளம் தூர்வாருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 306 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் தென்கீரனூர் கிராமத்தில் வசித்துவரும் பூம் பூம் மாட்டுக்காரர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடந்து 5 பேருக்கு இலவச வீட்டுமனைபட்டாவை கலெக்டர் ஷரவன்குமார் வழங்கினார். .கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்