கறவை மாடு வளர்ப்பு குறித்து 24-ந் தேதி இலவச பயிற்சி

கறவை மாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-01-19 19:11 GMT

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன் புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்தான ஒருநாள் இலவச பயிற்சி வருகிற 24-ந் தேதி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடன் உதவி, பசுந்தீவன உற்பத்தி, கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு மற்றும் தூய்மையான பால் உற்பத்தி ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியரால் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 24-ந் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கு பெறலாம் என மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்