ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை முயற்சியாக 2,500 சதுர அடி பரப்பளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை 3 மணி நேரத்திற்குள் அகற்றும் பணியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆற்காடு டெல்லி கேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.,
நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், தாசில்தார் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.