கோகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் அருகே கோகுல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-23 18:19 GMT


ராமநாதபுரம் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் கோகுல விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதன்பின்னர் வானில் கருடன் வட்டமிட வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாரணமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோகுல விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்